News May 7, 2024
இளம்பெண் தற்கொலை போலீசார் விசாரணை

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் 8-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியன், ஆட்டோ டிரைவர், மனைவி ஆனந்தி. முனியன் சரிவர ஆட்டோ ஓட்ட செல்லாமல் மதுகுடித்து விட்டு தினமும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆனந்தி நேற்று மதியம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
Similar News
News July 5, 2025
‘குற்றங்களுக்கு போதைப்பொருள் உபயோகமே காரணம்’

“சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப்பொருள் உபயோகம் காரணமாக உள்ளது. வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித் தருவதுடன் கொடுமையான குற்றங்கள் மீண்டும் நடக்காமல் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்” என சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி பேசியுள்ளார்.
News July 5, 2025
எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு z + பாதுகாப்பை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இபிஎஸ்க்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போழுது z + பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
News July 5, 2025
சேலம் கோ ஆப் டெக்சில் பழைய பட்டுக்கு புதிய பட்டு விற்பனை!

சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் பழசுக்கு புதிய பட்டு சேலை விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பழைய வெள்ளி ஜரிகை பட்டு சேலைகளை மதிப்பீடு செய்து அதற்கு பதில் புதிய பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், வருகிற ஜூலை 15ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.