News March 27, 2025
இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி!

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கைக்கடிகாரம் மற்றும் கடிகாரம் பழுதுபார்க்கும் 3 மாத கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிக்கு நேரடியாகவோ (அ) https://forms.gle/8Zf9r5Ne61x7CERW9 என்ற Google Form மூலமாகவோ வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
சேலம்: 8 மாதங்களில் 2,104 பேருக்கு நாய்க்கடி!

சேலம்: ஆத்துார்,தலைவாசல்,கெங்கவல்லி,எடப்பாடி,மேட்டூர்,ஓமலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தெரு நாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த, 8 மாதங்களில் மட்டும் 2,104 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மக்களே , தெரு நாய்கள் தொந்தரவு இருந்தால் உடனடியாக 0427-2212844 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!
News September 14, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News September 13, 2025
சேலம்: 148 பணியிடங்களுக்கு 4000 பேர் விண்ணப்பம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 148 உதவியாளர் பணியிடங்களுக்கு 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 4 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எழுத்துத் தேர்வு வரும் அக்.11- ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.