News February 5, 2026
இலவச பயிற்சி வகுப்பு – ஆட்சியர் அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு, புதுப்பாளையத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வருகிற பிப்.10ஆம் தேதி முதல் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 17, 2026
கடலூரில் 2,590 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திட்டக்குடி 279, விருத்தாசலம் 317, நெய்வேலி 256, பண்ருட்டி 309, கடலூர் 258, குறிஞ்சிப்பாடி 278, புவனகிரி 304, சிதம்பரம் 298, காட்டுமன்னார்கோவில் 291, மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 2,590 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News February 16, 2026
கடலூர்: துப்பாக்கி தோட்டாக்களை ஒப்படைக்க உத்தரவு

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தமிழக சட்டசபை தேர்தல் 2026 முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உரிமம் பெற்று வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
News February 16, 2026
கடலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


