News August 20, 2025
இலவச சட்ட ஆலோசனை மையத்தின் சேவைகள்

சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை,குழந்தைகளுக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளுக்கு ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர் பெறலாம் .நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அதாலட் மூலம் தீர்வு காணலாம். வக்கீல் பீஸ் இல்லாமலே வாதாட முடியும். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 20, 2025
திருப்பத்தூரில் கூட்டுறவு வளர்ச்சிக் குழு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை 6 மணியளவில் கூட்டுறவுத்துறை சார்பில் மாவட்ட கூட்டுறவு வளர்ச்சி குழு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. உடன் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் மலர்விழி துணைப்பதிவாளர் மீனாட்சி உதவி பொது மேலாளர் நபார்டு ஸ்ரீபதிராஜன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
News August 20, 2025
திருப்பத்தூர்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருப்பத்தூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17461705>>தொடர்ச்சி<<>>
News August 20, 2025
பாலியல் சீண்டல் செய்த காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஆம்பூர் அருகே உள்ள சான்றோர் குப்பம் பகுதியில் 2021ம் ஆண்டு ஏசுபாதம் எனும் காவலாளி வீட்டில் தனியாக இருந்த சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ய முயன்றார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர், காவலாளியை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், நேற்று (ஆக-19) இந்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.