News August 3, 2024
இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

சீர்காழி அருகே விளைந்திடசமுத்திரம் ஊராட்சியில் ஆம்புலன்ஸ் இல்லாத குறையை போக்கும் விதமாக, விளைந்திடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி ராஜா தனது சொந்த செலவில் வாங்கப்பட்ட ஆம்புலன்சை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் விளைந்திடசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையானது முற்றிலும் இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 96556 61700 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News November 5, 2025
மயிலாடுதுறை: நாளை மழை வெளுத்து வாங்கும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
மயிலாடுதுறை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
மயிலாடுதுறை: பாம்பு கடித்து பரிதாப பலி

மணல்மேடு, தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (60). விவசாய தொழிலாளியான இவர் வயலில் புல் அறுக்கும்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மணல்மேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


