News March 19, 2025
இலங்கை போலீசார் வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை கொழும்பு புறநகர் பகுதியில் 26.08.2020 அன்று இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றிய வழக்கில் இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றிய பிரதீப்குமார் பண்டாரா தமிழகத்திற்கு அகதியாக தப்பி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் திருச்சி முகாமில் இருக்கும் நிலையில் நேற்று நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் விசாரணையை ஏப்.5 க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
Similar News
News May 8, 2025
இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வேலை

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனுக்கு நேர்முகத் தேர்வு நாளை (09-05-2025) நடைபெற உள்ளது. இதற்கு தகுதி உடையவர்கள் தங்களது சுய விவரங்களை (Resume) இன்று (மே.8) இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் தளத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
News May 8, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.08) வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் உள் பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் குறிப்பாக பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, பார்த்திபனூர், அபிராமம், நயினார் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News May 7, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.