News June 10, 2024
இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு ஓட்டு – விமர்சனம்

மதுரை ஆதினம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ” நடந்து முடிந்த தேர்தலில் நரேந்திர மோடி நேற்றைய தினம் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். அதற்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள். சீமானும் அண்ணாமலையும் அதிகமான ஓட்டு வாங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள். தமிழக மக்களிடம் ஒரே ஒரு குறை தான், இலங்கைத் தமிழர்களை கொன்றவர்களுக்கு ( திமுக, காங்கிரஸ் கூட்டணி) ஓட்டு போட்டுள்ளனர்” என்றார்.
Similar News
News September 10, 2025
மதுரை: மேலூர், திருமங்கலம் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

மதுரை மேலூர், திருமங்கலம் ஒருபோக சாகுபடிக்கு செப்டம்பர் 18ம் தேதி வைகையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலூரில் 85 ஆயிரம் ஏக்கருக்குதினமும் 900 கன அடியும், திருமங்கலத்தில் 19,500 ஏக்கருக்கு 230 கன அடி வீதம் மொத்தம் 1130 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். *ஷேர் பண்ணுங்க
News September 10, 2025
சோழவந்தான் வைகை ஆற்றில் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் போஸ் (78). இவர் ஆட்டோவில் சோழவந்தான் வந்து கொண்டிருந்தார். அப்போது வாந்தி எடுத்ததால் ஆடைகளை கழுவ சோழவந்தான் வைகை ஆற்றில் இறங்கிய முதியவர் போஸ் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அவரது சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இச்சம்பம் தொடர்பாக சோழவந்தான் போலீசார் விசாரித்து விடுகின்றனர்.
News September 10, 2025
மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகள்

மதுரையில் இருந்து பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில், வழக்கமாக 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரு எக்சிகியூட்டிவ் வகுப்பு பெட்டியும் இருக்கும். இந்நிலையில், நாளை (வியாழக்கிழமை) முதல் 14 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.