News June 22, 2024

இலங்கை காவலர் மீதான வழக்கு ஒத்தி வைப்பு

image

இலங்கை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் திருடி கடந்த 2020ஆம் ஆண்டு தப்பி வந்து, தனுஷ்கோடியில் இலங்கை போலீஸ்காரர் பிரதீப்குமார் பண்டாரா (34) கைதானார். திருச்சி முகாமில் தங்கி உள்ள இவர் மீதான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜரான நிலையில் இதை விசாரித்த நீதிபதி குமரகுரு வழக்கினை அடுத்த மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Similar News

News September 11, 2025

இராம்நாடு: தவில், நாதஸ்வரம் பயிற்சி பள்ளி சேர்க்கை

image

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தொடங்கி நடத்தப்பட உள்ள தவில் நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதில் 13 வயது முதல் 20 வயது வரை இப்பயிற்சி பள்ளியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆண், பெண் என ஆகிய இருபாலரும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊக்கதொகையாக வழங்கப்படும்.

News September 11, 2025

ராமநாதபுரம்: பள்ளி வளாகத்தில் கிடந்த தொழிலாளி சடலம்

image

தொண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி 39. சுமை துாக்கும் தொழிலாளி. அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை உள்ளது.2 மாடி கொண்ட அந்த கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு ஹைதர்அலி கீழே விழுந்தார். அவரது உடல் ரேஷன் கடை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிடந்தது.அதிகாலையில் அந்த பக்கமாக சென்ற சிலர் உடல் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர்.

News September 11, 2025

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இலவச ஆன்மீக பயணம்

image

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலிருந்து காசி விசுவநாதர் ஆலயத்திற்கு இந்தாண்டு 1.50 கோடி செலவில் அரசு நிதியில் ஆன்மீக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 600 பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும், இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இதில் பங்கேற்க 1800 425 1757 இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!