News August 1, 2024
இலங்கை கப்பல் மோதி மீனவர் உயிரிழப்பு!

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400 மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து மீனவர்கள் சிலர் மாயமாகினர். இந்நிலையில், அதில் மீனவர் மலைசாமி உயிரிழந்துள்ளார். சக மீனவர்களான மூக்கையா, முத்து, முனியாண்டி, ராமச்சந்திரன் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.
Similar News
News May 8, 2025
இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வேலை

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனுக்கு நேர்முகத் தேர்வு நாளை (09-05-2025) நடைபெற உள்ளது. இதற்கு தகுதி உடையவர்கள் தங்களது சுய விவரங்களை (Resume) இன்று (மே.8) இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் தளத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
News May 8, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.08) வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் உள் பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் குறிப்பாக பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, பார்த்திபனூர், அபிராமம், நயினார் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News May 7, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.