News March 10, 2026
இலங்கை அணியின் கோச் ஆனார் கேரி கிர்ஸ்டன்

டி20 WC தொடரில் இலங்கை அணியின் படுதோல்வியை அடுத்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகினார். இதையடுத்து அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு 2011 இல் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேரி கிர்ஸ்டன், 2 ஆண்டுகாலத்திற்கு வரும் ஏப்ரல் 14, 2028 வரை தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
Similar News
News April 5, 2026
மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் இணைந்தார்

NDA-வில் இணைய வேண்டும் என விஜய்க்கு அழைப்பு விடுத்ததால், கடந்த மார்ச் மாதம் பாஜக செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ். பிரசாத் நீக்கப்பட்டார். இந்நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நயினார் நாகேந்திரனிடம் ஏ.என்.எஸ். பிரசாத் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை, மீண்டும் கட்சியில் இணைந்து தேர்தல் பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News April 5, 2026
3 நாள்களில் 3,000 வேட்புமனு தாக்கல்

மார்ச் 30-ல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் நாளையுடன் (ஏப்.6) முடிவடைகிறது. விடுமுறை நாள்கள் தவிர்த்து 3 நாள்கள் வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 3,000 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 1,639 வேட்பு மனுக்கள் வந்துள்ளன. நாளை காலை 11-3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்படும். சரியாக 3 மணிக்கு அலுவலக நுழைவாயில் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 5, 2026
அவிநாசியில் தாமரை மலருமா? எஸ்.பி.வேலுமணி பளீச்

அதிமுக கோட்டையாக கருத்தப்பட்ட அவிநாசி தொகுதியில் பாஜகவின் எல்.முருகன் களமிறங்குகிறார். ஆனால், இதுவரை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த மக்கள், இம்முறை தாமரை சின்னத்தில் வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரட்டை இலை போல தாமரையும் அனைத்து மக்களுக்கும் அறியப்பட்ட சின்னம் என்பதால், மக்களிடம் எந்த குழப்பமும் வராது எனக் கூறிய எஸ்.பி.வேலுமணி, கொங்கு மண்டலத்தை அதிமுக கைப்பற்றும் என்றார்.


