News October 19, 2024

இலங்கையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வருகை

image

இராமநாதபுரம், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த (செப்.28) அன்று மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் காவல் (அக்.10) நிறைவடைந்த நிலையில் அபதாரம் விதித்து விடுதலை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று(அக்.18) சென்னை விமான நிலையம் வருகை தந்தனர். அவர்களை இராமேஸ்வரம் மீனவர்கள் சங்க தலைவர்கள் வரவேற்றனர்.

Similar News

News August 25, 2025

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் சார்பில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உறைகள் தோண்டுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி காவிரி – வைகை – கிருதுமால் – குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் இன்று மனு அளித்தனர். கூட்டமைப்பு பொதுச் செயலர் அர்ச்சுணன், வட்டச் செயலர் மலைச்சாமி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

News August 25, 2025

ராம்நாடு: மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

image

ராமநாதபுரம் மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம். <>இங்கு கிளிக்<<>> செய்து முதல்வரின் முகவரி துறையில் (CM Cell) உடனே புகார் செய்யுங்கள் (அ) 1100 என்ற உதவி எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் துறை செயல்படுவதால் உங்கள் பிரச்சனைக்கு உடனே தீர்வு கிடைக்கும். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News August 25, 2025

ராம்நாடு: மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

image

ராமநாதபுரம் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயது நிரம்பி இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அதில் Form 6ஐ கிளிக் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பெயர் சேர்த்தல் நீக்கம், மாற்றம் செய்ய Form 7 (அ) 8ஐ கிளிக் செய்ய வேண்டும். வெளிநாட்டு வாழ் மக்களும் Form 6Aவை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லோரும் வாக்களிக்க உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!