News November 30, 2025
இலங்கையில் தவிக்கும் இந்தியர்கள்: Helpline அறிவிப்பு

‘டிட்வா’ புயல், இலங்கையை நிலைகுலைய வைத்துள்ளது. அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, கொழும்பு ஏர்போர்ட்டில் 150 தமிழர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் உணவு, அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர். இந்நிலையில், சிக்கியிருப்பவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் ‘+94 773727832’ என்ற எண்ணில் தொடர்புகொள்ள கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
Similar News
News December 3, 2025
மாதம் ₹20,500 கொடுக்கும் அசத்தல் திட்டம்!

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒவ்வொரு மாதமும் ₹20,500 வரை வழங்குகிறது. இத்திட்டத்தில் ₹30 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் கழித்து 8.2% வட்டியுடன் ஆண்டுக்கு ₹2,46,000 Interest கிடைக்கும். இதை 12-ஆக பிரித்தால், ஒவ்வொரு மாதமும் ₹20,500 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் சேரமுடியும். அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.
News December 3, 2025
சற்றுமுன்: பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்

விவசாய அணியின் மாநிலத் துணைத் தலைவர் S.ராஜசேகரை கட்சியில் இருந்து நயினார் அதிரடியாக நீக்கியுள்ளார். ராஜசேகர் மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாலும், கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக நயினார் அறிவித்துள்ளார்.
News December 3, 2025
பொங்கல் பரிசு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, இந்தாண்டு பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு ₹5000 வழங்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், பொங்கலுக்கு ₹5,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ள நயினார், பொங்கல் பரிசுக்காக கூட்டுறவு வங்கிகளை அடமானம் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.


