News January 29, 2026
இலங்கைக்கு கடத்த இருந்த 110 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவலின் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடற்கரை பகுதியில் சோதனை நடத்திய போது பதுக்கி வைத்திருந்த 110 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 30 கிலோ கடல் குதிரைகளை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 16, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (பிப்.16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News February 16, 2026
ராமநாதபுரம்: சாலை விபத்தில் 3 பேர் பலி

இராமநாதபுரம் மாவட்டம், கானா விலக்கு – பெருநாழி சாலையில் பரளச்சி அருகே, சாலையின் நடுவில் பைக் குறுக்கே வந்ததால், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விருதுநகரை சேர்ந்த சோலையப்பன் மற்றும் மகன் சோலைச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி விஜயலெட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 16, 2026
ராம்நாடு: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

ராம்நாடு மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். <


