News February 13, 2025
இலங்கைக்கு கடத்தவிருந்த புளி, சிகரெட், செட்டாப் பாக்ஸ் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியப்பட்டினத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பாதையில் போலீசார் நேற்றிரவு ரோந்தில் இருந்தனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 450 கிலோ புளி, மான்செஸ்டர் சிகரெட் வகைகள் மற்றும் சன் டிடிஎச் 295, Dish Tv Smart, 100 செட்டாப் பாக்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகுடன் தப்பிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
Similar News
News August 27, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து விபரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 26.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
தூத்துக்குடி: தேர்வின்றி.. இரயில்வே வேலை.!

இந்தியன் ரயில்வேயில் 3000 க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025 ம் தேதிக்குள் இங்கே <
News August 26, 2025
தூத்துக்குடியில் 13 ரவுடிகள் அதிரடி கைது

தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன், பாலமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கிருஷ்ணராஜபுரம், தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த 13 ரவுடிகளை போலீசார் இன்று(ஆக.26) கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.