News December 30, 2024
இறப்பிலும் இணைபிரியாத கணவன், மனைவி

சேலம், வீரபாண்டி முன்சீப் தோட்டம் பகுதியில் வசிக்கும் பெரியசாமி. இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார். இவருக்கு ஜெகதாம்பாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஜெகதாம்பாள் வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்த கணவர் பெரியசாமி இறந்த மனைவியை பார்த்து கொண்டு இருந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார்.
Similar News
News March 9, 2026
ஆத்தூர்: மனைவிக்கு பிடித்த பாடலை வைக்காததால் பரபரப்பு!

ஆத்தூர் பழனியாபுரியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அஜித்குமார். இவர் வீட்டில் நேற்று டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவரது அவரது மனைவி புவனேஸ்வரி (25) தனக்கு பிடித்த பாடலை டிவியில் போடும்படி கூறியுள்ளார். இதில் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி சமையலறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். ஆத்தூர் போலீசார் விசாரணை!
News March 9, 2026
சேலத்தில் நிலம் வாங்கி தருவதாக 20 லட்சம் மோசடி!

சேலம் தேவேந்திரபுரத்தைச் சேர்ந்த வேலாயுதம், நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த விக்னேஷ், மோகன் மற்றும் சித்திரமணி ஆகியோர் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரு தரப்பினரிடமும் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 8, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


