News November 9, 2025
இறந்த பின்னும் ரத்த ஓட்டம்.. இந்தியாவில் முதல் முறை!

ஒருவர் இறந்த பின்பு, குறிப்பிட்ட நேரத்திற்குள் உறுப்புகளை எடுக்காவிட்டால், அதை பயன்படுத்த முடியாது. பொதுவாக, மூளைச்சாவு ஏற்பட்டதும் உறுப்புகள் தானமாக பெறப்படும். இந்நிலையில், டெல்லியில் இறந்த பெண் ஒருவரின் உறுப்புகளை தானமாக பெற, இறந்த உடலில் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர் டாக்டர்கள். HCMCT ஹாஸ்பிடலில், ECMO கருவி மூலம் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, ஆசியாவிலேயே முதல் முறையாக சாதனை படைத்துள்ளனர்.
Similar News
News November 9, 2025
பிக் பாஸ் செட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சி சமூக சீரழிவுக்கு வழிவகுக்கிறது என கூறி, அதை தடை செய்ய வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார். அதன் ஒருபகுதியாக, பிக்பாஸ் செட் அமைந்துள்ள வேல்ஸ் ஃபிலிம் சிட்டிக்கு எதிரே, தவாகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிக் பாஸ் செட்டை சுற்றி 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News November 9, 2025
Gpay, phonepe வச்சிருக்கீங்களா.. வந்தது குட் நியூஸ்!

உங்களின் அக்கவுண்ட்டில் திடீர் திடீரென சிறு தொகைகள் காணாமல் போகிறதா? அவை auto pay கட்டணங்களாக இருக்கலாம். எப்போதோ ஆக்டிவேட் செய்து, அதை கேன்சல் செய்யாததால் மாதா மாதம் பிடிக்கப் படுகிறது. இதையெல்லாம் இனி நீங்கள் உங்கள் UPI செயலியிலேயே கண்காணித்து மேனேஜ் செய்ய முடியும் என்று NPCI அறிவித்துள்ளது. இந்த வசதி வரும் டிசம்பர் 31-ம் தேதி முதல் உங்கள் ஆப்பில் வந்துவிடும். SHARE IT
News November 9, 2025
கோவை மாணவி கேங்க் ரேப்… அடுத்தடுத்து அதிர்ச்சி

கோவையில் கல்லூரி மாணவி கேங்க் ரேப் செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏர்போர்ட் பின்புறமுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் பாழடைந்த மோட்டார் அறையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரின் செல்போன்களை ஆய்வு செய்துவரும் போலீசார், மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். விசாரணை விரிவடையுமா?


