News November 26, 2025
இறந்த தாய்.. 4 நாள் ஃபிரிட்ஜில் வைக்க சொன்ன மகன்!

உ.பி.யில் முதியோர் இல்லத்தில் இருந்த ஷோபாதேவி இறந்துவிட்டதாக மகனிடம் போனில் கூறப்படுகிறது. ‘வீட்டுல கல்யாணம் நடக்குது.. 4 நாள் ஃபிரிட்ஜில் வைங்க’ என அந்த மகன் கூறி இருக்கிறார். பின்னர் உறவினர்களின் ஏற்பாட்டில், ஷோபா எரிக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறில், வாழும் காலத்திலும் முதியோர் இல்லத்தில் தவிக்கவிட்டு தண்டித்த மகன், இறந்த பிறகும் அத்தாயை மனவேதனையில் ஆழ்த்தியுள்ளார்.
Similar News
News November 27, 2025
சென்னையை புயல் தாக்கப் போகிறதா?.. வந்தது எச்சரிக்கை

வங்கக் கடலில் இன்று உருவாகியுள்ள டிட்வா புயல் கரையை கடக்கும் இடத்தை IMD கணித்துள்ளது. அதன்படி, நவ.30-ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரைகளுக்கு இடையே புயல் கரையை கடக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சென்னையை புயல் தாக்க வாய்ப்பிருப்பதாக வெதர்மேன்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், புயலின் நகர்வுகளை பொறுத்து கணிப்புகள் மாறலாம்.
News November 27, 2025
MGR, ஜெ., போல விஜய்யை CM ஆக்குவார்: ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தில் ஊழலில்லாத, நேர்மையான புதிய நிர்வாகத்தை உருவாக்க <<18401023>>செங்கோட்டையன்<<>> தவெகவில் இணைந்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதல்வராக்க உதவியது போல விஜய்யை CM ஆக்க செங்கோட்டையன் துணை நிற்பார் என்றும் அவர் தெரிவித்தார். அனைவரும் இணைந்து ஒரு புதிய வரலாற்றை படைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 27, 2025
WPL: ₹3.2 கோடிக்கு தீப்தி சர்மா ஏலம்

WPL ஏலத்தில் இந்திய ஆல்ரவுண்டர்
தீப்தி சர்மாவை ₹3.2 கோடிக்கு UP வாரியர்ஸ் வாங்கியுள்ளது. அவரை வாங்க டெல்லி கேபிடல்ஸ் ஆர்வம் காட்டிய நிலையில், இறுதியாக RTM வாய்ப்பை பயன்படுத்தி தீப்தி சர்மாவை UP வாரியர்ஸ் தட்டித் தூக்கியது. ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லேனிங்கையும் ₹1.9 கோடிக்கு UP வாரியர்ஸ் ஏலம் எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர் ரேணுகா சிங் ₹60 லட்சத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸில் இணைந்துள்ளார்.


