News July 10, 2025

இறந்து கிடந்த முதியவரின் காலை கடித்து குதறிய நாய்கள்

image

ஜமீன் பல்லாவரம், சுபம் நகர், மூவரசம்பட்டு ஏரி அருகே நேற்று காலை நடைப்பயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள காலி இடத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் காலை நாய் ஒன்று கடித்துக் குதறியது. தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News July 10, 2025

பறவைகளுக்காக பண்டிகையை துறந்த மக்கள்

image

செங்கல்பட்டு, வேடந்தாங்கல் இது ஒரு சரணாலயம் மட்டுமல்ல. இது இயற்கையின் சுழற்சியையும், மனிதர்களின் பாதுகாப்பையும் உணர்த்தும் ஒரு தனித்துவமான இடம். இது பறவைகளுக்கான புகலிடமாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. பறவைகள் இங்கு வந்து செல்வதால் இந்த ஊர் மக்கள் தீவாளிக்கு கூட வெடி வெடிப்பதில்லை. ஷேர்!

News July 10, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (ஜூலை 09) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக, மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரம் தேவை என்றால், புகைப்படத்தில் கொடுத்துள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள், இந்த தொலைபேசி எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணிடுங்க மக்களே!

News July 9, 2025

ஆபத்துகளில் இருந்து காக்கும் குளுந்தியம்மன்

image

செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குளுந்தியம்மன் கோயில். குளுந்தியம்மன் இங்கு ஊர்காப்பு அம்மனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். குளுந்தியம்மன் “ஊர்காப்பு அம்மன்” ஆக இருப்பதால், ஊரையும் மக்களையும் ஆபத்துகளில் இருந்து காத்து ரட்சிப்பதாக நம்பப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இங்கு வந்து வழிபடுகின்றனர். மற்றவர்களுக்கு இதை பகிருங்கள்!

error: Content is protected !!