News November 7, 2025

இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்

image

இறந்துவிட்டதாக ஈமச் சடங்குகள் செய்யப்பட்டவர், உயிருடன் வந்தால் எப்படி இருக்கும்? சத்தீஸ்கரில் அதுதான் நடந்திருக்கிறது. மகன் புருஷோத்தமனை காணவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர். அப்போது, போலீஸுக்கு கிணற்றில் ஒரு சடலம் கிடைத்தது. அதனை தனது மகன் என நினைத்து புருஷோத்தமனின் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். திடீர் ட்விஸ்டாக உறவினர் வீட்டிலிருந்த புருஷோத்தமன் வீடு திரும்பியுள்ளார். இதை என்ன சொல்வது?

Similar News

News January 28, 2026

‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ்.. வந்தாச்சு முக்கிய அப்டேட்

image

ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை சென்னை HC ரத்து செய்திருந்தது. இந்நிலையில், தனி நீதிபதி அமர்வில் வழக்கை வாபஸ் பெற படத்தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணைக்கு வரும்போது தான் வாபஸ் பெற முடியும் என்பதால், அதற்குப் பிறகு சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழுவிற்கு செல்ல தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

News January 28, 2026

பள்ளிகள் நாளை விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

<<18985799>>காரைக்கால்<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ரவி பிரகாஷ் அறிவித்துள்ளார். மஸ்தான் சாஹிப் தர்கா (பெரிய பள்ளிவாசல்) கந்தூரி விழாவையொட்டி, நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேநேரத்தில், 10, +2 மாணவர்களுக்கு நாளை செய்முறை தேர்வு இருந்தால், அதில் மாற்றம் இருக்காது. அதனால், செய்முறை தேர்வு எழுதும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும். SHARE IT.

News January 28, 2026

விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியம்

image

விலங்குகள் கடித்தால் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கீரிப்பிள்ளை கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் 3 மாதம் கழித்து உயிரிழந்ததை அடுத்து, சுகாதாரத்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். பூனை, கீரிப்பிள்ளை போன்ற விலங்குகள் கடித்தால் ரேபிஸ் பரவும் என்பதால், உடனடியாக தடுப்பூசி செலுத்துவது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!