News May 24, 2024

இர்பான் மீது ஏன் நடவடிக்கை இல்லை – ஜெயக்குமார்

image

யூடியூபர் இர்பான் தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இர்பான், உதயநிதிக்கு நெருங்கியவர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. ஆனால், சாமானிய மக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருந்தால் கைது, குண்டாஸ் என வழக்கு மேல் வழக்கு போட்டிருப்பார்கள் ” என கூறினார்.

Similar News

News April 5, 2026

சென்னை: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

சென்னை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>இந்த இணையதளத்தில்<<>> புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News April 5, 2026

புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

image

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ரயில் நிலையப் பிரிவில் சென்னை எழும்பூரில் 10, 11- ஆவது நடைமேடையில் பராமரிப்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் நேற்று தொடங்கிய நிலையில், ஏப்.7-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன. இதனகாரணமாக, இன்று (ஏப். 5) முதல் கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் 8 புகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2026

நாளை மீண்டும் சென்னையில் விஜய் பரப்புரை

image

தவெக தலைவர் விஜய் தியாகராய நகர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் தொகுதிகளில் நாளை தேர்தல் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மார்ச் 30ஆம் தேதி பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த பின் பரப்புரையை தொடங்கிய அவர், திருச்சி மற்றும் புதுச்சேரியிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து மீண்டும் சென்னையில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், குறிப்பிட்ட தொகுதிகளில் பரப்புரை நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

error: Content is protected !!