News March 26, 2025
இரு லாரிகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

விருத்தாசலத்தில் இருந்து நேற்று (மார்.25) அதிகாலை லாரி ஒன்று வந்தவாசி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. லாரியை விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி (55) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, பெருநகர் பூமாசெட்டிகுளம் அருகே லாரி சென்றபோது, எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில், எதிரே வந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (45) சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார்.
Similar News
News August 26, 2025
காஞ்சிபுரத்தில் பேருந்தில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு…

காஞ்சிபுரம் மக்களே, அரசு பேருந்தில் சில்லறை வழங்கவில்லை என்றாலோ, உங்கள் பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றாலோ, பேருந்து கால தாமதமாக வருகிறது என்றாலோ, நடத்துனர் மரியாதை குறைவாக நடத்தினாலோ, உங்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டாலோ (அ) லக்கேஜை பேருந்தில் மறந்து விட்டாலோ இனி கவலை வேண்டாம். இந்த எண்ணில் (1800 599 1500) உங்கள் குறைகளை புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News August 26, 2025
காஞ்சிபுரத்தில் அரசு சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில்!

காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெறும் இடங்கள். மிலிட்டரி ரோடு தனலட்சுமி திருமண மண்டபம், குன்றத்தூர் நகராட்சி முருகன் கோயில் ரோடு ராமச்சந்திரா மஹால், காவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வாலாஜாபாத் வாரணவாசி SL நாதன் திருமண மண்டபம் , காஞ்சிபுரம் கீழம்பி ஊராட்சி மன்ற அலுவலகம், கொல்லச்சேரி குன்றத்தூர் மெயின் ரோடு, ஏ.பி.எஸ் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. ஷேர்!
News August 26, 2025
தனியார் வங்கி நிர்வாகியை தாக்கியவர் கைது

காஞ்சிபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 25) தனியார் நிதி நிறுவன வங்கி அதிகாரியை கத்தியால் குத்திய வழக்கில் குணா என்ற நபரை காவல்துறை கைது செய்தனர். வீடு கட்டுவதற்காக பெற்ற கடனை செலுத்த தவறிய நிலையில், கடனை திரும்ப செலுத்த சொல்லி தொடர்ந்து குணாவை நிதி நிறுவன ஊழியர் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குணா அவரை கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.