News November 23, 2024
இரு மாநில போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம்

புதுச்சேரி எல்லையில் உள்ள நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மடுகரை சாராயக் கடையில் தமிழக டிஎஸ்பி தலைமையில் போலீசார் அதிரடியாக திடீர் சோதனையில் இன்று ஈடுபட்டனர். இதற்கு புதுச்சேரி போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு மாநில போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. புதுச்சேரி போலீசாரின் அனுமதியின்றி தமிழக போலீசார் சோதனை செய்ய எதிப்பு தெரிவித்தனர்.
Similar News
News September 13, 2025
புதுவை: பெண்ணை தாக்கி பணம், நகை பறிப்பு

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி, நேற்று முன்தினம் காலை புதுவை மீன் மார்க்கெட் செல்ல கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் பஸ் ஏற நின்றபோது, ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர் ஒருவர், தமிழரசிக்கு லிப்ட் கொடுப்பதாகக்கூறி ஏற்றி சென்று; இ.சி.ஆரில் அவரை தாக்கி ரூ.1,500 மற்றும் 1 கிராம் நகையை பறித்து சென்றதாக அவர் கொடுத்த புகாரின் பேரில், கோட்டகுப்பம் போலீசார் தமிழ்ச்செல்வன் என்பவரை கைது செய்துள்ளனர்.
News September 13, 2025
புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று (செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மூலம் தெரிவிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது. SHARE IT NOW…
News September 13, 2025
புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று(செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.