News April 13, 2025
இரு பைக்குகள் மோதி விபத்து – வாலிபர் உயிரிழப்பு

வேடல் கிராமம் பெரியார் நகரில் அரக்கோணம் – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இறந்தவர் யார் என அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 14, 2025
விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு(15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க
News April 14, 2025
ராணிப்பேட்டை: பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிகலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்படும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்பித்திட கடைசி நாள் 20.04.2025 மாலை 5.00 மணி ஆகும். இதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெறும்.
News April 13, 2025
தமிழ் புத்தாண்டு- இரத்னகிரி முருகன் கோயில் போங்க

இராணிப்பேட்டை ரத்தினகிரி மலையில் உள்ள பாலமுருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க