News April 11, 2024
இரு நாட்கள் அரசியல் விளம்பரங்கள் செய்ய தடை

வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்.18 மற்றும் வாக்குப் பதிவு நாளான ஏப்.19 ஆகிய இரு நாட்களில் அரசியல் கட்சிகளோ , வேட்பாளா்களோ , அல்லது தனியாா் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ, மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதியின்றி தோ்தல் சம்பந்தமான விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
JUST NOW: அரக்கோணத்தில் ரயில் சேவை பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் – சென்னை ரயில் தடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததில், 90 நிமிடங்களுக்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்கம்பிகளை சரி செய்யும் முயற்சியில், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அரக்கோணம் ரயில் நிலையத்தில் சதாப்தி , இண்டர்சிட்டி ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
News July 8, 2025
ஹவுஸ் ஓனருடன் பிரச்சனையா?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 / 9445777416 (வாடகை அதிகாரி) புகார் செய்யலாம் அல்லது <
News July 8, 2025
வாடகை வீட்டில் இருப்போருக்கான உரிமைகள்

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்