News September 9, 2024
இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். வந்தவாசியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிரே வந்த பைக்கும் வெண்குன்றம் கூட்டுச்சாலை அருகே மோதிக்கொண்டது. இதில் ஆகாஷ், விஜயன் என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
Similar News
News August 24, 2025
காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக.25-ம் தேதி காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை குறித்து மனு அளிக்கலாம். இது போன்ற முக்கிய அறிவிப்புகளை SHARE பண்ணுங்க.
News August 24, 2025
கஞ்சா விற்ற 3 பேர் கைது

காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா, இம்தியால், ஹேமநாதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
News August 24, 2025
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அடையாள அட்டை!

ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் திருப்பெரும்புதூர் சார் ஆட்சியர் ந.மிருநாலினி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம்.ஹிலாரினா, ஜோஷிடா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.