News August 31, 2025
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான பாதுகாப்பு அறிவுரை

சேலம் மாநகர் காவல்துறை, இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பை முதன்மையாகக் கருதி பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. பயணத்திற்கு முன் வாகனத்தைச் சரிபார்த்தல், முழுக்கவச ஹெல்மெட் அணிதல், வேக வரம்புகளை கடைபிடித்தல், பிரதிபலிப்பு ஜாக்கெட் மற்றும் வெளிர் நிற உடைகள் அணிதல், மேலும் வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரம் பேணுதல், போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News September 3, 2025
சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டி

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சென்னை சென்ட்ரல்-ஆழப்புலா தினசரி எக்ஸ்பிரஸ்(22639), ஆழப்புலா- சென்னை சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ்(22640), சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் தினசரி எக்ஸ்பிரஸ்(12695), திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ்(12696),கோவை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்(16618/16617) ஆகிய ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள்!
News September 3, 2025
விரைவில் 69 ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் படிக்கத் தெரியாத 1.10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இவர்களில் முதற்கட்டமாக 70,000 பேருக்கு, 1,921 தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை அனைவருக்கும் கல்வி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என கல்வியாளர்கள் கருத்து!
News September 3, 2025
மிலாது நபி: சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள்!

மிலாது நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (செப்.04) முதல் செப்.08- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், செப்.07- ல் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு செப்.07, 08- ல் சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.