News October 26, 2024

இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை 

image

காளையார்கோயிலில் வரும் அக்.27 அன்று 223வது மருதுசகோதரர்கள் நினைவு நாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்குஞ்சலி செலுத்த வருபயர்கள், முன் அனுமதி பெற்று சொந்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்ல வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்களில் சென்று எக்காரணம் கொண்டும் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News February 13, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (12..02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News February 12, 2026

சிவகங்கை: அக்காள் கணவரை கொன்றவருக்கு ஆயுள்.!

image

காரைக்குடி அருகே சிறு சாக்கவயலைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜு (26). இவர் 2023 ம் ஆண்டு திருவேகம்பத்தூர் அருகே புக்குடியில் உள்ள தனது அக்காள் கவிதா வீட்டுக்குச் சென்றார். அங்கு தனது அக்காள் கணவர் ரவிச்சந்திரனிடம் மது வாங்கித் தருமாறு தகராறு செய்த நிலையில், அவரை கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் ராஜுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

News February 12, 2026

சிவகங்கை SP அலுவலகத்தில் தேர்தல் தனிப்பிரிவு துவக்கம்

image

சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி., சுகுமார் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 4 எஸ்.எஸ்.ஐ.,க்கள் என 15 பேர் அடங்கிய தேர்தல் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிதல், வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

error: Content is protected !!