News January 18, 2025
இருக்கன்குடி கோயிலுக்கு சென்ற தென்காசி பக்தர் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலி பட்டியை சேர்ந்தவர் மாரிச்செல்வம்(31), திருமணமாகவில்லை. இவர் தனது குடும்பத்துடன் நேற்று(ஜன.17) சாத்தூர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வழிபட சென்றபோது மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 30, 2025
தென்காசி: ரோட்டில் அடிபட்டு கிடந்த மான்

தென்காசி, சுரண்டையில் இருந்து சாம்பவர்வடகரை செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடிபட்ட நிலையில் கிடந்த மானை அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த வனத்துறையினர் சாலையில் அடிபட்டு கிடந்த மானிற்கு முதலுதவி அளித்து அதனை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விட்டனர்.
News September 30, 2025
தென்காசி: தனியார் பள்ளிகளில் அதிக வசூலா??

தென்காசி மக்களே, நாளை விஜயதசமி உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் முன், தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு விதிக்கபட்ட கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கும் மேலாக வசூலித்தால், 044-28251688 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தென்காசி தனியார் பள்ளி கட்டணம் முழுப் பட்டியலுக்கு இங்கே <
News September 30, 2025
கீழப்பாவூர் ஏக தின தீர்த்தவாரி உற்சவம் தேதி அறிவிப்பு

கீழப்பாவூர் உள்ள நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவோண ஏகதின தீர்த்தவாரி உற்சவம் அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலைஏழு மணி முதல் பெருமாள் தெப்ப குளத்திற்கு பெருமாள் எழுந்தருளல், தொடர்ந்து பல்வேறு பூஜைகள், தீர்த்த வலம் வருதல், தீபாராதனை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் செய்து வருகின்றனர்.