News April 16, 2025
இராம்நாடு பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் வெப்ப அலை குறித்த உள்ளூர் வானிலை செய்திகளை, செய்திதாள், வானொலி தொலைக்காட்சிகள், TN ALERT செயலி மூலம் தெரிந்து கொண்டு அன்றைய பணிகளை திட்டமிடுமாறும், வீட்டிலிருந்து வெளியே செல்வது மிக அவசியமாக இருப்பின் நண்பகல் 12 மணிமுதல் மாலை 3 மணிவரை வெளியே செல்வதை தவிர்க்கும் மாறும் காலை மாலை செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News April 18, 2025
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு மேலே உள்ள படத்தில் உள்ள தொலைபேசி எண்களை அழைக்கலாம்.
News April 18, 2025
“இராம்நாட்” விமானம் பற்றி தெரியுமா?

ராஜ ராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதியின் ஆட்சியின்போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அவர் ராமநாதபுரம் சீமை இளைஞர்களை ராணுவத்தில் சேருமாறு அறிவுறுத்தியதோடு பல லட்சம் ரூபாய் மதிப்பில் அரசுக்கு “இராம்நாட்” என்ற பெயரில் ஒரு விமானத்தை கொடையாக கொடுத்துள்ளார்.மேலும் இராஜ ராஜேஸ்வர சேதுபதி,போர்க்கால நிதியுதவிக்காக பல லட்சங்களை வழங்கியது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
News April 18, 2025
ராமர் பாலம் அருகே சுற்றுலா படகு சேவை – இலங்கை அரசு திட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள ராமர் பாலம் பகுதியில் சுற்றுலா படகு சவாரியை தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கு பயணிகள் சேவை தொடங்கப்படும் என்று இலங்கை அதிபர் அநுர குமார் இன்று (ஏப்.18) அறிவித்துள்ளார்.மேலும் சுற்றுலா பயன்பாட்டிற்கு மணல் திட்டுகளை தனியார் பயன்படுத்தி கொள்ளவும் இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது பற்றி உங்க கருத்து.Comment,Share.