News October 7, 2025
இராம்நாடு: பள்ளி மாணவர்கள் ரூ.10,000 வரை வெல்ல வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிலும் +1, +2 மாணாக்கருக்கு அக்.14, கல்லூரி மாணாக்கருக்கு அக்.15 ல் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ராமநாதபுரம் முஹமது சதக் தஸ்தகிர் பி.எட்., கல்லூரியில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் முதல் 3 பரிசுத் தொகை முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 காசோலை வழங்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 7, 2025
ராம்நாடு: 10th போதும்; அரசுப் பள்ளியில் சூப்பர் வேலை.!

மத்திய அரசின் Ministry of Tribal Affairs கீழ் செயல்படும் (EMRS) பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளுக்காக மொத்தம் 7,267 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10-ம் வகுப்பு முதல் B.ED வரை படித்த விண்ணப்பதாரர்கள் இங்கே கி<
News October 7, 2025
ராம்நாடு: குறுக்கே மாடு பாய்ந்து பைக்கில் சென்றவர் பலி.!

திருவாடானை காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் 35. இவர் பண்ணவயலிலிருந்து தொண்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அச்சங்குடி அருகே மாடு குறுக்கே சென்றதால், நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கு ராஜேஸ்கண்ணன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 7, 2025
ராமேஸ்வரத்தில் டூம்ஸ்டே மீன்; சுனாமி அபாயம்.?

ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர் வலையில் நேற்று, அரிய மீன் இனமான 5 அடி நீளமுள்ள டூம்ஸ்டே மீன் சிக்கியது. ஆழ்கடலில் வாழும் இம்மீன் கடல் மேற்பரப்பில் வந்த சமயத்தில் பாம்பன் மீனவர் வலையில் சிக்கி உள்ளது. ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த மீன்கள் கரை ஒதுங்கினால் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என கூறுவதாக, மீன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.