News February 26, 2026

இராம்நாடு: நாய்கள் துரத்தியதில் குளத்தில் விழுந்த மான் பலி

image

திருவாடானை, மங்களநாதன் குளத்தில் புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் மிதந்தது. அதனை கண்ட பகுதி இளைஞர்கள் அந்த மான் உடலை மீட்டு கரை சேர்த்தனர். அந்த புள்ளிமான் உடலில் பல்வேறு இடங்களில் நாய்கள் துரத்தி கடித்த காயங்கள் தென்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்து அடக்கம் செய்தனர்.

Similar News

News February 26, 2026

இராமநாதபுரம்: தவறாக அனுப்பிய பணத்தை திருப்பி பெறலாம்!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News February 26, 2026

ராம்நாடு: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

மனித உரிமைகள் ஆணையம் – 22410377

போக்குவரத்து அத்துமீறல் – 9383337639

போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

முதியோருக்கான அவசர உதவி -1253

தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

கடலோர பகுதியில் அவசர உதவி-1093

ரத்த வங்கி – 1910

கண் வங்கி -1919

விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

News February 26, 2026

இராமநாதபுரம்: போலீஸ் SI மீது தாக்குதல்

image

எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ரமேஷை தாக்கி மிரட்டிய வழக்கில் முருகராஜா (30), வீரமணி (45) கைது செய்யப்பட்டனர். நித்யா–முத்துக்குமார் இடையேயான முன்விரோத பிரச்சினை தொடர்பாக அவர்கள் நிலையத்துக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உதவி ஆய்வாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!