News April 8, 2026
இராம்நாடு: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் சிறுமியை அசோக்குமார் (37) என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், அசோக் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.
Similar News
News April 8, 2026
இராம்நாடு: மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் – MLA

ராமநாதபுரம் கிராம பகுதிகளில் நேற்று, காதர்பாட்சா முத்துராமலிங்கம் பிரச்சாரத்தின் போது பேசியதாவது, திராவிட மாடல் அரசின் மக்கள் நல திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்துள்ளது என்றும், மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பெண்கள் விரும்புகின்றனர். அப்போதுதான் தி.மு.க அரசின் திட் டங்கள் தொடர்ந்து கிடைக்கும் என கூறுகிறார்கள் என்று பேசினார்.
News April 8, 2026
இராம்நாடு: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் சிறுமியை அசோக்குமார் (37) என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், அசோக் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.
News April 8, 2026
இராம்நாடு: இன்று இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு..!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி துணைமின் நிலையத்தில் அவசரப் பணி காரணமாக இன்று (ஏப்.8) காலை 11 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். குறிப்பாக மின்னோட்ட பகுதிகளான சிட்கோ, எமனேஸ்வரம், மஞசள்பட்டினம், வலையனேந்தல், வைகை நகர், புதுநகர், காந்தி நகர், பெரும்பச்சேரி, மணிநகர், சேதுபதி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.


