News January 14, 2026
இராம்நாடு: அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

இராம்நாடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 15, 2026
இராமநாதபுரம்: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சாயல்குடி அண்ணாநகரில் வசித்து வந்தவர் பாப்புராஜ் (33). கோவில்களில் சிற்ப வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் அவரது வீட்டில் இன்று அதிகாலை 6 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி மீனா மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 15, 2026
இராம்நாடு: குடிநீர் இல்லாமல் சிரமமா?

இராமநாதபுரம்: குடிநீர் தொடர்பான மாவட்ட புகார்களுக்கு 18004257040 எண்ணை அழைக்கவும்.
ராமநாதபுரம் 04567-220404
திருப்புல்லாணி 04567-25411,
மண்டபம் 04567-259234
ஆர்.எஸ்.மங்கலம் 04581-251226,
திருவாடனை 04567-254228
பரமக்குடி 04564-226706
நயினார்கோயில் 04564-266229
போகலூர் 04564-262226
முதுகுளத்தூர் 04576-222230
கமுதி 04576-223228
கடலாடி 04576-266528
*ஷேர் பண்ணுங்க
News February 15, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (பிப்.14) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.


