News October 24, 2025

இராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

image

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக்.09 அன்று மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அவர்களிடம் விசாரணை நடத்திய மன்னார் நீதிபதி நவம்பர்.06 தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News

News October 24, 2025

ராமநாதபுரத்திற்கு முதல்வர் வருகை

image

இராமநாதபுரத்தில் வருகின்ற 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடக்கவிருக்கும் நிலையில், அந்த குருபூஜையில் கலந்து,ஐயா முத்துராமலிங்க சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இராமநாதபுரம் வருகை புரிய உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற அக்-28 தென்காசி சென்று அரசு நிகழ்ச்சியில் கலந்து பின், மதுரை சென்று அங்கு தங்கி, கார் மூலம் ராமநாதபுரம் செல்வதாக கூறப்படுகிறது.

News October 23, 2025

ராம்நாடு: கரண்ட் பில் தொல்லை; இனி இல்லை

image

ராம்நாடு மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க.!

News October 23, 2025

ராம்நாடு: பெற்றோர்கள் கவனத்திற்கு

image

ராமநாதபுரம் மக்களே, அக்.1 முதல் 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு ஆதாரில் கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை; இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப் போன்ற அரசு உதவிகளை பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. உடனே UPDATE பண்ணுங்க. இந்த நல்ல தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!