News April 26, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு உதவியாளர் பணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ளது, பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்படும். இதற்கு 21 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணபிக்கலாம். விண்ணபிக்க இன்றே கடைசி நாள் (ஏப்ரல்.26) <
Similar News
News April 26, 2025
முதியவரை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

துரைப்பாண்டி(60), முத்துக்குமார்(60) இருவரும் கொரோனா காலத்தில் ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் யாசகம் வாங்கி வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 2022ல், காசை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் துரைப்பாண்டி, பீர் பாட்டிலால் தாக்கியதில் முத்துக்குமார் உயிரிழந்தார். துரைப்பாண்டிக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
News April 26, 2025
இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

இன்று (25.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, இராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். மேலும் பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட காவல் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
News April 25, 2025
429 ஊராட்சிகளில் மே.1-ல் கிராம சபை கூட்டம் – கலெக்டர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் மே.1ஆம் தேதி காலை 11 மணியளவில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சி பொது நிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு, கட்டட அனுமதி, சுய சான்றிதழ் படி கட்டட அனுமதி,வரி, வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழியில் செலுத்துதல் குறித்து விவாதிக்க மக்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.