News April 17, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

Similar News

News January 27, 2026

ராமநாதபுரம்: உடலை வாங்க மறுத்து போராட்டம்

image

வைரவனேந்தல் அருகே காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(35). நேற்று முன்தினம் இவர் உறவினர் வீட்டிற்கு சென்று அதிகாலை 12.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது குளத்தூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகன மோதியதில் உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதியும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News January 27, 2026

ராம்நாடு: காலி இடம் இருக்கா; அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க.
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News January 27, 2026

ராம்நாடு: மருத்துவமனையில் ஊசி போட்டவர் உயிரிழப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம், அருங்குளத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பில்லத்தியான் (45), பரமக்குடி தனியார் மருத்துவமனையில் ஊசி செலுத்திய சில நிமிடங்களில் மயங்கி உள்ளார். பரமக்குடி அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நேற்று தனியார் மருத்துவமனை ஊசி செலுத்தியதே காரணம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எமனேசுவரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!