News March 23, 2026

இராமநாதபுரம்: தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்

image

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முகிழ்தகம் பஞ்சாயத்துக்குட்பட்ட கடம்பனேந்தல் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை, மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என கிராம மக்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஊருக்குள் நுழையும் இடத்தில் பதாதை வைத்துள்னர். மேலும் இதே போல கானாட்டாங்குடியிலும் பதாதை வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 9, 2026

BREAKING: ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது

image

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News April 9, 2026

இராமேஸ்வரம்:சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள்

image

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். பிப்.19ல் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்றம், மார்ச் 26ல் 5 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. விமானம் மூலம் சென்னை வந்த மீனவர்கள் அங்கிருந்து ராமேஸ்வரம் அழைத்து வரப்பட்டனர்.

News April 8, 2026

இராம்நாடு: இந்த நம்பரை 9445030725 SAVE பண்ணிக்கோங்க!

image

இராம்நாடு மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

error: Content is protected !!