News April 23, 2025
இராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஏப்.23) நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News April 24, 2025
மாணவருக்கு இராம்நாடு எம்பி வாழ்த்து

ராமநாதபுரம் அரண்மனை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ரஷத் என்ற மாணவர் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 52ஆவது இடமும், தமிழக அளவில் 5ஆவது இடமும் பெற்று இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஏப்.23) இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ஸ்ரீ ரஷத்-க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
News April 24, 2025
இரவு ரோந்து பணி அதிகாரிகள் போன் நம்பர்

இன்று (23.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
News April 23, 2025
மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரத்தில் மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வேளாண் வணிக இணை இயக்குநர் அமுதன் தலைமை வகித்தார். வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக முதுநிலை மேலாளர்கள் பாண்டித்துரை, கவிமுகில், வேளாண் இணை, துணை இயக்குநர்கள் பாஸ்கரமணியன், கோபாலகிருஷ்ணன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீசன், வள்ளல் கண்ணன் உட்பட பலர் ஆலோசனை வழங்கினர்.