News December 28, 2025
இராமநாதபுரம்: இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.27) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 30, 2025
ராமநாதபுரம் அருகே உடல் நசுங்கி பெண் பலி

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்டான் என்பவரின் மனைவி பொன்னுத்தாய். இவர் அருப்புக்கோட்டை காந்தி நகர், பிள்ளையார் கோயில் அருகில் இன்று அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
News December 30, 2025
ராமநாதபுரம்: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

ராமநாதபுர மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். <
News December 30, 2025
ராமநாதபுரம்: சம்பவ இடத்திலே தம்பதியினர் பலி

கமுதி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கிழவன் 45. இவர் கமுதி ஒன்றிய அலுவலகத்தில் மருந்து தெளிக்கும் தற்காலிக பணியாளராக பணிபுரிகிறார்.இவர் மனைவி ஜோதிமுத்துவுடன் 38, கானாவிலக்கு பகுதியில் இருந்து டூவீலரில் கமுதி நோக்கி சென்றார். அப்போது மேலராமநதி அருகே பழுதாகி நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக டூவீலர் மோதியதில் இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


