News December 31, 2025

இராமநாதபுரத்திற்கு புதிய டிஐஜி நியமனம்

image

இராமநாதபுரம் சரக புதிய டிஐஜியாக தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னாதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இராமநாதபுரம் சரக டிஐஜியாக தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2012 காவல்துறை பேட்ச் அதிகாரி ஆவார்.

Similar News

News January 28, 2026

ராம்நாடு: மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மீனவர் குடும்பங்கள்

image

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட்.08 அன்று மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையினர் கைது செய்து 18 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1.46 கோடி அபராதம் விதித்து சிறையில் அடைத்தது. சிறையில் உள்ள 10 மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து மீனவர்களை வீடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

News January 28, 2026

ராம்நாடு : EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News January 28, 2026

ராமநாதபுரம் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

image

ராமநாதபுரம் நகராட்சி துப்புரவு பணியாளர்களின் தங்குமிடம் மோசமாக இருந்ததை கண்ட நீதிபதிகள் மெஹபூப் அலிகான் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் அதிகாரிகளைக் கடுமையாகக் கண்டித்தனர். நம் உறவினர்களை இங்கு தங்க வைப்போமா? இவர்களும் மனிதர்கள்தானே எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அடுத்த 10 நாட்களுக்குள் பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என நகராட்சி சுகாதார அலுவலருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

error: Content is protected !!