News September 17, 2025

இராணிப்பேட்டை: இரவு ரோந்து பணிகள் விபரம்

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (17.09.2025) இரவு 9 மணி முதல் அதிகாலை வரை ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். ராணிப்பேட்டை, அரக்கோணம் உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையினர் ரோந்து செய்கிறார்கள். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக 9884098100 அல்லது 04172-290961 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Similar News

News November 10, 2025

ராணிப்பேட்டை: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அரசு ஊழியர்!

image

அரிகலபாடி பாளையக்கார கண்டிகையை சேர்ந்தவர் ரமேஷ் (40) மருத்துவமனை ஊழியராக உள்ளார். இவர் தனது மனைவி, 2 மகன்களுடன் நேற்று (நவ.9) கல்லாற்றில் குளிக்க சென்றார். மூத்த மகன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவனை காப்பாற்ற கல்லாற்றில் குதித்தார். அவரது மூத்த மகனை மீன் பிடித்தவர்கள் காப்பாற்றிய நிலையில், ரமேஷ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்கள் ரமேஷை தேடி வருகின்றனர்.

News November 10, 2025

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு காவல்துறை ரோந்து

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து குழுவில் ராணிப்பேட்டை, ஆர்காட், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலைய அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் எவ்வித அவசரத்திலும் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News November 9, 2025

காவலர் தேர்வு மையங்களை அதிகாரிகள் ஆய்வு

image

இன்று (நவ.09) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. தேர்வு மையங்களை காவல்துறை துணை தலைவர் Z. ஆனி விஜயா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!