News May 23, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, தற்போது கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மாலை 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 14, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

ஈரோடு மாவட்டத்தின் 10 தாலுகா அலுவலகங்களில் இன்று (பிப்.14) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம், மொபைல் எண் பதிவு மற்றும் புதிய கார்டு விண்ணப்பம் போன்ற சேவைகளைப் பெறலாம். பொதுமக்கள் தங்கள் பகுதி நியாயவிலை கடை முகாமில் கலந்துகொண்டு ரேஷன் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். SHAREIT
News February 14, 2026
சென்னிமலை அருகே மது பாட்டில் பதுக்கிய முதியவர் கைது

சென்னிமலை போலீஸ் எஸ்ஐ சரவணன் நேற்று காலை 10 மணியளவில் நல்லபாழி பகுதியில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, வடக்கு ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (61) என்பவர், அரசு மதுபானத்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 20 எக்ஸ்பிரஸ் பிராந்தி பாட்டில்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
News February 14, 2026
சென்னிமலை அருகே மது பாட்டில் பதுக்கிய முதியவர் கைது

சென்னிமலை போலீஸ் எஸ்ஐ சரவணன் நேற்று காலை 10 மணியளவில் நல்லபாழி பகுதியில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, வடக்கு ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (61) என்பவர், அரசு மதுபானத்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 20 எக்ஸ்பிரஸ் பிராந்தி பாட்டில்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.


