News September 5, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 6, 2025

இன்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம், இன்று (செப்.6) நடைபெற உள்ளது. மரக்காணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த முகாமில், 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை அளிக்க உள்ளனர். பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, மருத்துவக் குழுக்களிடம் பரிசோதனை செய்துகொண்டு, முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News September 5, 2025

அறிஞர் அண்ணா கல்லூரி: தேசிய அளவில் சாதனை

image

தேசிய அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை NIRF வெளியிட்டுள்ளது. இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, 154-வது இடத்தைப் பிடித்துத் தமிழகத்திற்கும், குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. மேலும், வேலூர் மண்டலத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் இக்கல்லூரி முதலிடம் வகிக்கிறது.

News September 5, 2025

விழுப்புரம்: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

image

விழுப்புரம் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.

▶️ இந்தியன் ஆயில்: 18002333555
▶️ பாரத் பெட்ரோல்: 1800224344
▶️ HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

error: Content is protected !!