News July 7, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட போலீசார் இன்று இரவு (ஜூலை 7) 11 மணி முதல் நாளை (ஜூலை 8) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள காவல் அதிகாரிகளின் நேரடி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு மரியாதை

சீர்காழி காவல் சரகம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு கட்டை பையில் ஒரு கைபேசி மற்றும் ரூ.5,100 பணமும் கிடந்துள்ளது. இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் காமராஜ் என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காணாமல் போன பொருள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு சீர்காழி காவல் நிலையம் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
News August 22, 2025
மயிலாடுதுறை: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <
News August 22, 2025
மயிலாடுதுறை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து அங்கிருந்த மருத்துவ அலுவலர்களிடம் நேரடியாக கேட்டறிந்தார். மேலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டார்.