News October 19, 2024
இரவு பகலாக முதலமைச்சர் ட்வீட் செய்து கொண்டே இருக்கிறார்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் அப்போது அவர் பேசுகையில், இரவு பகலாக முதலமைச்சர் ட்வீட் செய்து கொண்டே இருக்கிறார், ஏதோ தமிழுக்கு இவர்கள் மட்டுமே காவலர்கள், இவர்கள் மட்டுமே தமிழ் பற்றாளர்கள், பாஜகவைச் சார்ந்தவர்கள், மத்திய அரசு தமிழ் மீது பற்று இல்லாதவர்கள் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் முயற்சி செய்து வருகிறார் என்றார்.
Similar News
News April 29, 2025
ரயில்வேயில் உடனடி வேலை வாய்ப்பு

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
News April 29, 2025
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நீதிபதி மாற்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே.13இல் தீர்ப்பளிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் உள்பட 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி அறிக்கை வெளியிட்டார். அதில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News April 28, 2025
கோவையில் பாலியல் தொழில்: 2 பேர் கைது

கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஒரு வீட்டில், இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக, நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டினை வாடகைக்கு எடுத்து, மகேஸ்வரன் என்பவர் பாலியல் தொழில் செய்து வந்தது தெரிந்தது. பின்னர் அவரையும், அவருடன் இருந்த 38 வயது பெண்ணையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.