News March 21, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 21, 2025
936 காவலர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்கல்

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள பயண அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் 936 காவல் ஆளிநர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது.
News March 21, 2025
அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான நிலை அலுவலர்கள் உடன் அரசின் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
News March 21, 2025
நாதகவின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்த மாரியப்பன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று சீமான் அறிவித்துள்ளார்.