News November 6, 2025
இரவில் லேட்டா தூங்கினால் இவ்வளவு ஆபத்தா?

இரவில் அதிக அளவிலான செயற்கை வெளிச்சத்தில் (மின்சார விளக்குகள்) இருப்பது, இதய நோய் ஆபத்தை அதிகரிப்பதாக அமெரிக்க ஆய்வில் உறுதியாகியுள்ளது. அதிக நேரம் அதிக செயற்கை வெளிச்சத்தில் இருப்பது மூளையை அதிக அழுத்தத்துக்கு ஆளாக்குவதுடன், ரத்தக்குழாய்களை பாதித்து இதய நோய்க்கும் காரணமாகிறது. இரவில் வெளிச்சத்தில் அதிகநேரம் விழிப்பதால் 5 ஆண்டுகளில் 35%, 10 ஆண்டுகளில் 22% இதயநோய் வரும் ஆபத்து அதிகரிக்கிறதாம்.
Similar News
News February 1, 2026
ரசிகர்களை மட்டுமே விஜய் நம்பவில்லை: அருண்ராஜ்

ஊழல் சக்தியுடன் விஜய் கூட்டணி அமைக்காமல் இருப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என அருண்ராஜ் தெரிவித்துள்ளார். விஜய் வெறும் ரசிகர்களை மட்டும் நம்பி அரசியலுக்கு வரவில்லை என்றும் மக்களின் பேராதரவுடன்தான் களத்திற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் கொள்கை முடிவு என்றும், கூட்டணி கட்சிகள் வரும் என்ற நம்பிக்கையில் விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
News February 1, 2026
இந்திய ரூபாய் தாளின் ரகசியம் தெரியுமா?

இன்றைய தினம், மத்திய பட்ஜெட் மீதுதான் பலரின் கவனம் இருக்கும். இந்நிலையில், ரூபாய் நோட்டு குறித்த தகவல் ஒன்றை அறிவோம். ரூபாய் நோட்டு காகிதத்தால் ஆனது கிடையாது. லினன் & பருத்தியால் தான் இவை தயாரிக்கப்படுகின்றன. 75% பருத்தி, 25% லினன் என்ற காம்போவில் உருவாக்கப்பட்டு, அவை ஜெலட்டின் பிசின் கரைசலுடன் கலக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே ரூபாய் நோட்டுகள் நீண்ட காலம் கிழியாமல் இருக்கின்றன. SHARE IT.
News February 1, 2026
தமிழை காக்கும் மோடி; அழிக்கும் ஸ்டாலின்: தமிழிசை

தமிழ் கலாச்சாரம் அழிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிவகுத்ததாக திருமாவளவன் கூறிய கருத்துக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். PM மோடி இந்தியா முழுவதும் தமிழ் கற்க வேண்டும் என கூறும் நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த CM ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் தமிழின் பெருமையை இழக்க செய்கிறார்கள் என குற்றம்சாட்டினார். <<19017609>>டிடிவி தினகரன் <<>>உள்ளிட்டோரும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


