News October 13, 2025
இரண்டு வருட தலை மறைவு குற்றவாளி கைது

சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் அம்மாபேட்டை சேர்ந்த மோகனசுந்தரம். இவர் நீதிமன்றப் பிணையாணையில் வெளியே வந்தார். மீண்டும் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இரண்டு வருட காலமாக தேடி வந்த நிலையில் இன்று அம்மாபேட்டை பகுதியில் இருப்பதை அறிந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News October 14, 2025
சேலம்: VOTER ID இருக்கா உடனே இத பண்ணுங்க!

சேலம் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். <
News October 14, 2025
சேலம் அருகே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி!

சேலம்: கன்னங்குறிச்சி மின் அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் துரைசாமி (55). இவர் நேற்று கன்னங்குறிச்சிக்குட்பட்ட குமரன் நகர் மின்மாற்றியில் (Transformer) மேலே ஏறி பராமரிப்புப் பணி மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, மேற்புறம் சென்றுகொண்டிருந்த கம்பியில் இவருடைய கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட துரைசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News October 14, 2025
கிட்னி புரோக்கர்கள் சேலம் சிறையில் அடைப்பு!

நாமக்கல்லில் வறுமையில் வாடும் தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.விசாரணையில் பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஸ்டாலின் மோகன் (48), ஆனந்தன் (45) ஆகிய இருவரும் கிட்னி விற்பனை செய்யும் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.