News March 28, 2025
இரண்டு மூலவர் கொண்ட சிவன் கோயில்

கிருஷ்ணகிரியில் புகப்பெற்ற சிவன் கோயில்களில் ஐராவதேஸ்வரர் கோயிலும் ஒன்று. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்க வேண்டும். ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள் பாலிக்கிறார்கள். மேலும் சூரியனின் பூஜைக்காக நந்தி மூலவரை காட்டிலும் சற்று விலகி இருக்கும் தலமாகும். ஷேர் பண்ணுங்க
Similar News
News March 31, 2025
கிருஷ்ணகிரியில் பார்க்க வேண்டிய 5 முக்கிய திருத்தலம்

கிருஷ்ணகிரியில் பார்க்க வேண்டிய 5 முக்கிய திருத்தலம். 1. சந்திர சூடேஸ்வரர் கோயில் 2. ஸ்ரீ பார்ஷ்வ பத்மாவதே சக்திபீடம் 3. ஹனுமான் தீர்த்தம் 3. காட்டுவேர ஆஞ்சநேயர் கோவில் 4. ஸ்ரீ பேட்டராய் சுவாமி கோவில் 5. ஐராவதேஸ்வரர் திருக்கோயில். இதை தவிர்த்து வேறு கோயில்கள் உங்கள் பகுதியில் இருந்தால மறக்காம கமெண்ட் பண்ணிட்டு ஷேர் பண்ணுங்க
News March 31, 2025
பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <<-1>>ஷேர் பண்ணுங்க<<>>
News March 31, 2025
ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.