News April 16, 2025

இரட்டை கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

image

ஆவடி அடுத்த விளிஞ்சியம்பாக்கத்தில் பண்ணை வீட்டில் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களான ஜெகதீசன், விசாலினி தம்பதியர் வசித்து வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி பூவலட்சுமி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பூவலட்சுமி சிறையில் இறந்த நிலையில், சுரேஷிற்கு பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.

Similar News

News February 2, 2026

திருவள்ளூரில் 4 பேர் மீது குண்டாஸ்!

image

மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன்(32) தனது நண்பர்களான சுகுமார்(31), கேசவ மூர்த்தி(25) ஆகியோருடன் கடந்த ஜன.16ஆம் தேதி ஆந்திரா மாநிலம், கோனே நீர் வீழ்ச்சிக்கு சென்று விட்டு பைக்கில் திரும்பினர். அப்போது கஞ்சா போதை கும்பலுடன் ஏற்பட்ட தகராறில், பார்த்திபன், சுகுமார் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட ஜவகர்(24), வினோத்(36), ஜோதிஷ்(34), நீலகண்டன்(31) ஆகியோர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

News February 2, 2026

கும்மிடிப்பூண்டி; நண்பரின் மனைவியுடன் பாலியல் சீண்டல்!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆட்டோ டிரைவர் ஒருவர் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஆட்டோ டிரைவரின் நண்பர் நவீன்(27), வீட்டில் தனியாக இருந்த ஆட்டோ டிரைவரின் மனைவியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார். இதுகுறித்த புகாரில், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் நவின் மீது வழக்கு பதி செய்து, அவரைக் கைது செய்தனர்.

News February 2, 2026

ஆவடி மாநகராட்சியில் காலி மனைகளின் சுயமதிப்பீடு படிவம்

image

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்யும் நோக்கில், சுயமதிப்பீடு படிவத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் காலி மனைகளின் வரி நிர்ணயம் முறையாக மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!